தூத்துக்குடியில் விஏஓ அலுவலகத்தில் லேப்-டாப் திருட்டு

தூத்துக்குடி, ஆக. 5: தூத்துக்குடியில் விஏஓ அலுவலகத்தை உடைத்து லேப்-டாப் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி அண்ணா நகரில், மீளவிட்டான் பகுதி 2-க்கான கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை நேற்று முன்தினம் வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலையில் கிராம நிர்வாக அலுவலர் சிவபெருமாள், அலுவலகத்தை திறக்க வந்துள்ளார். அப்போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அலுவலகத்தில் இருந்த லேப்-டாப் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவம் இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் விஏஓ அலுவலகத்தில் லேப்-டாப் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: