கீழக்கரை பகுதியில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது

கீழக்கரை, ஆக.4: கீழக்கரை,முதுகுளத்தூர் பகுதிகளில் ஆடு திருட்டு தொடர்ச்சியாக நடந்து வந்தது. இது தொடர்பான புகார்களின்படி, ஆடுகள் திருடு போவதை கண்காணிக்க எஸ்பி சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுறுத்தினர். இதன்படி கீழக்கரை டிஎஸ்பி சுதிர்லால் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர். திருட்டு ஆடுகள் ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வாகன பதிவு எண்களை கண்காணித்தனர். இதில் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜ், ஆறுமுகம் ஆகியோர் ஆடு திருட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் இருவரையும் கீழக்கரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இவர்களிடமிருந்து 70 ஆடுகளும், மூன்றரை லட்சம் பணத்தை கைப்பற்றினர்.

The post கீழக்கரை பகுதியில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: