ஒட்டன்சத்திரம் பாலப்பன்பட்டியில் நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல்

ஒட்டன்சத்திரம், ஆக. 1: ஒட்டன்சத்திரம் அருகே பாலப்பன்பட்டி ஊராட்சி புதூர் காலனியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல், துணை தலைவர் ராசு (எ) நல்லபண்டிதவேல், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி சேனாதிபதி, ஒன்றிய துணை செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தண்டபாணி, ஊராட்சி செயலாளர் செல்வன் மற்றும் வார்டு உறுப்பினர்கள, சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் பாலப்பன்பட்டியில் நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: