சொன்னதை செய்யும் முத்தமிழறிஞர் வழியில், இளைஞர் அணியும் ஆற்றல்மிகு செயல்திட்டங்களால் வெல்லும்!: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

சென்னை:நம் முதலமைச்சரின் சொற்படி, நம் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்து, கழகத்தின் வெற்றிக்கு அயராது உழைப்போம்! என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவராகவும், இளைஞர் அணியின் தாயாகவும் விளங்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இளைஞர் அணியின் செயல்பாடுகளைப் பாராட்டி, எதிர்கால செயல் திட்டங்களுக்கான அறிவுரைகளையும், எங்களுக்கான இலக்கையும் நிர்ணயித்தார்கள். மேலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்ட கழகத் தலைவர்களுக்கு நன்றி. நம் முதலமைச்சரின் சொற்படி, நம் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்து, கழகத்தின் வெற்றிக்கு அயராது உழைப்போம்.

தமிழ்நாட்டின் உரிமை முழக்கமாகவும், இளைஞர் அணியின் அடுத்தக்கட்ட பணிகளுக்கான செயல்திட்டமாகவும் விளங்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அரசு பணிகளை தமிழருக்கே வழங்குவது, கலைஞர் 100வது திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்துவது, இல்லந்தோறும் இளைஞர் அணி முன்னெடுப்பின் வாயிலாக 25 லட்சம் புதிய இளைஞர் அணி உறுப்பினர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட, 13 தீர்மானங்களை இன்று நடைபெற்ற மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் நிறைவேற்றினோம். சொன்னதை செய்யும் முத்தமிழறிஞர் வழியில், இளைஞர் அணியும் ஆற்றல்மிகு செயல்திட்டங்களால் வெல்லும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post சொன்னதை செய்யும் முத்தமிழறிஞர் வழியில், இளைஞர் அணியும் ஆற்றல்மிகு செயல்திட்டங்களால் வெல்லும்!: உதயநிதி ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: