டி.கல்லுப்பட்டி அருகே சீரடி சாய்பாபா கோயிலில் திருப்பணிகளுக்கு பூமிபூஜை

பேரையூர், ஜூலை 28: டி.கல்லுப்பட்டி கொட்டாணிபட்டி அருகே நேற்று சீரடி சாய்பாபா கோவில் திருப்பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்த பூமிபூஜையில் திமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மனைவி பாரதி மணிமாறன் கலந்து கொண்டு யாகசாலையை வணங்கி கட்டிடப் பணிகளைத் துவக்கி வைத்தார். இங்கு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், கோ பூஜை, ஹரித்ரா பூஜை, புண்யாகவாசனம், சங்கல்பம், கணபதி பூஜை, யோகினி பலி, கிராம தெய்வ வழிபாடு உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றது. பூமிபூஜையைத் தொடர்ந்து அதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கொட்டாணிபட்டி பொதுமக்கள் சார்பாக அறக்கட்டளை நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்ட சீரடி சாய்பாபா கோயில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

The post டி.கல்லுப்பட்டி அருகே சீரடி சாய்பாபா கோயிலில் திருப்பணிகளுக்கு பூமிபூஜை appeared first on Dinakaran.

Related Stories: