சூதாடிய 2 பேர் அதிரடி கைது

திருக்கோவிலூர், ஜூலை 26: திருக்கோவிலூர் அடுத்த விளந்தை பகுதியில் மணலூர்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சன்னியாசி மகன் ஏழுமலை (49), தனபால் மகன் முருகன் (45) ஆகிய இருவரும் விளந்தை ஆலமரம் அருகே காசு வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். பின்னர் மணலூர்பேட்டை போலீசார், அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 48 புள்ளித்தாள், 110 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

The post சூதாடிய 2 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: