திருவள்ளூரில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரம் எம்ஜிஆர் சிலை அருகே 2வது வார்டு பாஜ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சுகதேவ் கண்டன உரையாற்றினார். இதேபோல் திருவலாங்காடு ஒன்றியம், கூலூர் கிராமத்தில் மாவட்ட பாஜ இளைஞரணி சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரவீன் குமார் அனைவரையும் வரவேற்றார். இளைஞரணி நிர்வாகிகள் யுகேஷ், வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூலூர் கிளை தலைவர் குமார், மகளிர் அணி நிர்வாகிகள் பூர்ணிமா, சிவரஞ்சனி, கல்பனா உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

The post திருவள்ளூரில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: