டெல்லி: மாண்பமை உச்சநீதிமன்றம் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்புரை வழங்கியது. மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 2004-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட உதவி இயக்குநர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பின் உரிய திருத்தங்கள் செய்து ஆய்வாளர்களாக பணிபுரிந்த 3 நபர்களுக்கு உதவி இயக்குநராக பதவி உயர்வு வழங்கி, அரசு ஆணைகள் வெளியிடப்பட்டன. தற்போது, 2022-ம் ஆண்டிற்கான காலிப்பணிடங்களுக்கு ஆய்வாளர்களாக பணிபுரியும் 14 நபர்களுக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
The post நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 14 ஆய்வாளர்கள் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு! appeared first on Dinakaran.
