4 தாசில்தார்கள் இடமாற்றம்: நாகை கலெக்டர் அதிரடி

 

நாகப்பட்டினம், ஜூலை 20: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் கடந்த 17ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையில் இருந்த கேபிள் டிவி சம்பந்தமான பொருட்கள் சேதமடைந்தது. இந்நிலையில் கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றிய ரமேஷ்குமார் நாகப்பட்டினம் தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். நாகப்பட்டினம் தாசில்தாராக பணியாற்றிய ராஜசேகரன் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தாசில்தாராக பணியாற்றிய மாரிமுத்து, நாகப்பட்டினம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிடத்தில் பணியாற்றிய தாசில்தார் திலகா, கீழ்வேளூர் சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இடமாற்றம் செய்து கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

The post 4 தாசில்தார்கள் இடமாற்றம்: நாகை கலெக்டர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: