திருமண மண்டப கட்டுமான பணியில் சுற்றுச்சுவர் இடிந்து 2 தொழிலாளிகள் பலி

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஸ் நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த காளிகாபுரம் விஸ்வநாதன்(19), ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வேலு (42), உட்பட தொழிலாளர்கள் சிலர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 11 மணியளவில் திருமண மண்டபத்தின் சுற்றுச் சுவர் அருகே தொழிலாளர்கள் பில்லர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 7 அடி உயர சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் விஸ்வநாதன், வேலு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமண மண்டப கட்டுமான பணியில் சுற்றுச்சுவர் இடிந்து 2 தொழிலாளிகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: