பாளை அருகே தந்தையை தாக்கிய மகன் கைது

நெல்லை, ஜூலை 15: பாளை அருகே செலவிற்கு பணம் தர மறுத்த தந்தையை தாக்கி மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர். பாளை அருகேயுள்ள தெற்கு அரியகுளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பரமசிவன் (66). இவரது மகன் கொம்பையா (24), சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். கடந்த 5ம் தேதி கொம்பையா செலவிற்கு பணம் தருமாறு தந்தை பரமசிவத்திடம் கேட்டார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கொம்பையா, பரமசிவனை அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து பாளை தாலுகா காவல் நிலையத்தில் பரமசிவன் புகார் அளித்தார். இதன் பேரில் எஸ்ஐ நாஞ்சில் பிரித்விராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து கொம்பையாவை கைது செய்தனர்.

The post பாளை அருகே தந்தையை தாக்கிய மகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: