பீர்பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு

 

தேவதானப்பட்டி, ஜூலை 11: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் ராமன் மகன் கணேசன்(24). இவர் தனது நண்பர் சிட்டையாவுடன் பொம்மிநாயக்கன்பட்டி செல்லும் சாலையின் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தெற்கு தெருவைச் சேர்ந்த ராமபாண்டி(24) என்பவர் கணேசனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கீழே கிடந்த பீர்பாட்டிலை எடுத்து கணேசனின் தலையில் அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கணேசன் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராமபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பீர்பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: