கழுவந்தோண்டி ஊராட்சியில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி ஊராட்சியில் அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர். அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கழுவந்தோண்டி ஊராட்சியில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டிருந்தன. இப்புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டு செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இப்புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

The post கழுவந்தோண்டி ஊராட்சியில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: