மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்தவர் கைது

ஜெயங்கொண்டம்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் வெற்றிச்செல்வன்(24). இவர் சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி இவரது நண்பரை பார்க்க ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு டிப்ளமோ படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது. அந்த பெண்ணை திருமண செய்வதாக கூறி வெற்றிச்செல்வன் தகாதமுறையில் நடந்து உள்ளார். அப்போது அந்தப்பெண் திருமணம் செய்யுமாறு கேட்டபோது வெற்றிச்செல்வன் மறுத்து விட்டார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் அங்குள்ள சிறிய கோவிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.இந்நிலையில் திருமணத்திற்கு பின் சென்னை செல்வதாக கூறி சென்றவர் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்தும் கூட வரவில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு பேசிய போது பதில் அளிக்கவில்லை. தன்னை தொடர்பு கொண்டு பேசினால் கொலை செய்து விடுவதாக மனைவியை மிரட்டி உள்ளார். இதுகுறித்து அப்பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் செய்துள்ளார். அதன்ன் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து வெற்றிச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

The post மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: