இதுகுறித்து இரு மீனவ கிராம பிரதிநிதிகளுடன் சமாதான கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை 300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தந்திராயன்குப்பம் அம்மன் கோயில் எதிரே திரண்டு, கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். கோட்டக்குப்பம் போலீசார் அவர்களை தடுக்க முயன்றபோது, திடீரென 2 பெண்கள் உள்பட 3 பேர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக போலீசார் தடுத்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் வந்து வரும் 4ம் தேதி முதல் சின்னமுதலியார்சாவடியை சேர்ந்த மீனவர்களின் படகுகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
The post படகுகள் நிறுத்துவதில் தகராறு பெண்கள் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.