ஆனால் அந்த 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்தனர். மேலும் டிஎன்ஏ பரிசோதனையை எதிர்த்து ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேரிடமும் டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் ஒரு மனுவை கடந்த 27ம் தேதி தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 8 பேரும் ஆஜராகினர். தொடர்ந்து விசாரணை நடந்தது.
The post வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேர் கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.