அதுமட்டுமல்லாமல் கடந்த 2014 முதல் செல்வராஜ் என்பவர் தொடர்ந்து தலைவராக செயல்பட்டு வருகிறார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மனுதாரர்கள் கொடுத்த புகார் மீது வடசென்னை மாவட்ட பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் சங்க நிர்வாகத்துக்கும், புகார்தாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிதம்பரநாதன் சார்பில் மூத்த வழக்கறிஞர் தாட்சாயிணி ரெட்டி, வழக்கறிஞர் ஏ.மனோஜ்குமார் ஆஜராகினர். சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சங்கத்தில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். பதிவு துறைக்கு உத்தரவிட்டதில் வறையும் காணமுடியவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
The post தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க முறைகேடு தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.