காளியம்மன் கோயில் ஆனித்திருவிழா நிறைவு

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கோட்டை  காளியம்மன் கோயிலில் 53ம் ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 17ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 26ம் தேதி வரை தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை உற்சவர் புறப்பாடு, வீதி உலாவும் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்தும், மாவிளக்கு போட்டும், கஞ்சிவாத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இரவு காப்பு அவிழ்த்தல், மஞ்சள் நீராட்டு உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் நாகராஜ குருக்கள், செயல் அலுவலர்இரா. சிவேந்திரராஜா செய்திருந்தனர்.

The post காளியம்மன் கோயில் ஆனித்திருவிழா நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: