உத்தவ் கட்சி நிர்வாகி அமலாக்கத்துறை முன் ஆஜர்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றுக்காலத்தில் கொரோனா சிகிச்சை மையங்களை அமைப்பதில் முறைகேடு நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. 21ம் தேதி சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. இதன் அடிப்படையில் உத்தவ் தலைமையிலான சிவசேனா நிர்வாகி சுரஜ் சவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள அமலாக்கத்துறைஅலுவலகத்தில் சுரஜ் சவான் நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

The post உத்தவ் கட்சி நிர்வாகி அமலாக்கத்துறை முன் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: