இதுதொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தாண்டு ஆமை முட்டையிடும் காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தாண்டு 35 ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. அங்கு குஞ்சு பொரிக்கப்பட்ட 1 லட்சத்து 83 ஆயிரம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும். இதற்காக பணியாற்றிய தன்னார்வலர்கள் மற்றும் வன களப் பணியாளர்களின் அளப்பரிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 1.83 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன: சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தகவல் appeared first on Dinakaran.