இத்திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடத்துக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பெண்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல்துறைக்கு வந்துள்ளது. இவ்வாறு டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறினார்.
The post பெண்கள் பாதுகாப்பு திட்டத்தில் 3 நாளில் 60 போன் அழைப்புகள்: டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல் appeared first on Dinakaran.