பாலமேடு சத்திரவெள்ளாளபட்டி காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை

அலங்காநல்லூர், ஜூன் 21: மதுரை பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டியில் அமைந்தள்ள  விநாயகர், காளியம்மன் ஆகிய கோயில்களில் மகா கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் நடந்தது. இதை தொடர்ந்து கும்பாபிஷேகத்தின் 48வது நாள் மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை நடத்தினர். பின்னர் புண்ணிய தீர்த்தங்கள் தெய்வங்கள் மீது ஊற்றப்பட்டு மண்டல அபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post பாலமேடு சத்திரவெள்ளாளபட்டி காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை appeared first on Dinakaran.

Related Stories: