வேதாரண்யம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் காய்கறி தினவிழா

வேதாரண்யம்,ஜூன் 18: வேதாரண்யம் அருகே அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் பச்சை காய்கறிகள் தினவிழா செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. விழாவில் அனைத்து வகையாக காய்கறிகளால் மாலைகள் மற்றும் கிரீடங்கள் உருவாக்கி, அவற்றை ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் அணிவித்தனர். மேலும் காய்கறிகள் சார்ந்த கதைகள் பாடல்கள், வினாடிவினா, விடுகதைகள், பழமொழிகள், பொன்மொழிகள் கூறுதல் என பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் பாத்திகள் அமைத்து காய்கறி விதைகளை ஊன்றி தண்ணீர் விட்டு தோட்டம் அமைத்தனர். விழா ஏற்படுகளை தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் வசந்தா, சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post வேதாரண்யம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் காய்கறி தினவிழா appeared first on Dinakaran.

Related Stories: