இதையடுத்து மாணவி அறையை சோதனையிட்டபோது, சாதனா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், என்னை யாரும் தேட வேண்டாம். எனக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளதால் சினிமா கனவை நிறைவேற்றி கொள்வதற்காக செல்கிறேன். சினிமா கனவு நிறைவேறியவுடன் வீடு திரும்புவேன் என்று எழுதி வைத்திருந்தார். இதுகுறித்து திருநள்ளாறு போலீசில் விடுதி காப்பாளர் உமா மகேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.
The post கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி மாயம்: காரைக்காலில் பரபரப்பு appeared first on Dinakaran.