நீட் தேர்வு எழுதியவர்களுக்கு உளவியல் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

 


சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு குறித்து ஒன்றிய கல்வித்துறை சில விளக்கங்களை கோரியுள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒன்றிய அரசுக்கு 2,3 நாட்களில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு உளவியல் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அலைபேசியில் அழைத்து மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும். அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி கேட்டுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தென்காசி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி கேட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர். 30 செவிலியர் பயிற்சி கல்லூரி கேட்டதில் 11 பயிற்சி கல்லூரிகள் கொடுத்துள்ளனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் மக்களுக்கு சிகிச்சையில் பிரச்சனையில்லை என்றும் அரசு மருத்துவமனையில் குறைகள் இருந்தால் மக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனபது தனிமனித விருப்பம் என்றும் செந்தில் பாலாஜி குடும்பத்தினரின் தனிப்பட்ட விருப்பத்தில் நாம் தலையிட முடியாது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

 

 

The post நீட் தேர்வு எழுதியவர்களுக்கு உளவியல் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: