பின்னர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டு பிரிஜ் பூஷண் பேசியதாவது: நாடு முழுவதும் தரமான சாலைகள், மருத்துவக் கல்லூரிகள், ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுத்தது என பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனவே, வரும் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நான் மக்களவைத் தேர்தலில் கைசர்கஞ்ச் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரிஜ் பூஷண் 6-வது முறையாக தாம் எம்.பி. பதவிக்கு கைசர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட போவதாக கூறியுள்ளதால் வீராங்கனைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
The post நாடாளுமன்ற தேர்தலில் 6-வது முறையாக போட்டியிடுவேன்: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷண் சிங் திட்டவட்டம் appeared first on Dinakaran.
