ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் கலைஞர் பிறந்தநாள் வக்கீல்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

தண்டையார்பேட்டை: கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, பாரிமுனை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் வக்கீல்கள் கேக் வெட்டி கொண்டினர். சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞரணி மற்றும் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில், கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சென்னை பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, மாவட்ட அமைப்பாளர் மருது கணேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சட்டத்துறை செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ கலந்துகொண்டு, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். வழக்கறிஞர்களுக்கு இலவச சட்டப்புத்தகங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக வழக்கறிஞர்கள், நீதிமன்றத்திற்கு வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

The post ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் கலைஞர் பிறந்தநாள் வக்கீல்கள் கேக் வெட்டி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: