கன்னியாகுமரி, திருப்பூருக்கு 1250 டன் அரிசி, 2 ஆயிரம் டன் நெல்

தஞ்சாவூர், ஜூன் 9: தஞ்சாவூரில் இருந்து 1250 டன் அரிசி பொது விநியோக திட்டத்திற்காக கன்னியாகுமரிக்கும், 2,000 டன் நெல் அரவைக்காக கும்பகோணத்தில் இருந்து திருப்பூருக்கும் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோக திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். இந்த நிலையில் நேற்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1250 டன் அரிசி மூட்டைகள், 2000 டன் நெல் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரிலிருந்து குமரிக்கு 1250 டன் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்திற்காக 21 வேகன்களில் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் 2,000 நெல் மூட்டைகள் அரவைக்காக திருப்பூருக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

The post கன்னியாகுமரி, திருப்பூருக்கு 1250 டன் அரிசி, 2 ஆயிரம் டன் நெல் appeared first on Dinakaran.

Related Stories: