டூவீலர் விபத்தில் சிறுவன் பலி

 

வடமதுரை, ஜூன் 9: அய்யலூர் அருகே புத்தூர் பிச்சம்பட்டியை சேர்ந்தவர்கள் மீனாட்சி சுந்தரம் (18), ஸ்டாலின் (21), திருப்பதி (21). இவர்கள் நேற்று முன்தினம் இரவு அய்யலூர் கோம்பையில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டு வீட்டிற்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். டூவீலரை ஸ்டாலின் ஓட்டி வந்தார். குப்பாம்பட்டி அருகே எல்லை காடு பகுதியில் வந்த போது எதிரே காக்காயன்பட்டியை சேர்ந்த சின்னையா வந்த டூவீலரும், இவர்கள் வந்த டூவீலரும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இதில் படுகாயமடைந்த 4 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா ட்சி சுந்தரம் நே ற்று மதியம் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்த புகாரில் வடமதுரை எஸ்ஐ அங்கமுத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post டூவீலர் விபத்தில் சிறுவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: