செயற்கை சாயம் பூசிய 5 டன் ஏலக்காய் பறிமுதல்

போடி: தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையிலான குழுவினர் கடந்த 6ம் தேதி போடி பகுதியில் உள டிவிகே நகர், குரங்கணி சாலையிலுள்ள தனியார் ஏலகாய் குடோன்களில் ஆய்வு செய்தனர். இதில் 3 டன் (3,000 கிலோ) ரசாயனம் பூசப்பட்ட ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பறிமுதல் செய்து, இந்த 2 குடோன்களுக்கும் சீல் வைத்தனர். அங்கு சோதனை நடத்தி கார்பைடு கல்லில் பழுக்க வைத்த 700 கிலோ மாம்பழங்களையும் பறிமுதல் செய்தனர். 2வது நாளாக, போடி சுப்புராஜ் நகர் 3வது தெரு, திருவள்ளுவர் சிலை அருகிலுள்ள தனியார் குடோன்களில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இதில் செயற்கை வண்ண சாயம் பூசப்பட்டு வைக்கப்பட்டிருந்த 2 டன் ஏலக்காய்களை பறிமுதல் செய்தனர்.

The post செயற்கை சாயம் பூசிய 5 டன் ஏலக்காய் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: