The post மலேசியா-இந்தோனேஷியா ஒப்பந்தம்; 18 ஆண்டு கடல் எல்லை பிரச்னை முடிவு appeared first on Dinakaran.
மலேசியா-இந்தோனேஷியா ஒப்பந்தம்; 18 ஆண்டு கடல் எல்லை பிரச்னை முடிவு

புட்ரஜ்யா: இந்தோனேஷிய பிரதமர் ஜோகோ விடோடோ தனது மனைவி மற்றும் அமைச்சர்கள் குழுவுடன் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் மலேசியா வந்தார். தொடர்ந்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கும் இடையே 18 ஆண்டுகளாக நீடித்து வந்த கடல் எல்லைப்பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டது. இதனை தொடர்ந்து மாலாக்கா மற்றும் சுலவேசி கடற்பகுதியில் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் பாமாயிலுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளை எதிராக இருநாடுகளும் ஒன்றிணைந்து போராட முடிவு எடுத்தனர்.