1 கோடி மரக்கன்றுகள்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே நெல்வேலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இயக்கம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மண்ணுக்கேற்ப மரங்களை தேர்வு செய்து மரம் நடுவது, அதனை பராமரிப்பதும் குறித்தும் மரங்கள் வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள், மரங்கள் அழிப்பினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு தனியார் இயக்கம் சார்பில், 1 கோடி மரக்கன்று நட நிர்ணயிக்கப்பட்டு முதற்கட்டப் பணியாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவேரி கூக்குரல் இயக்க நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 1 கோடி மரக்கன்றுகள் appeared first on Dinakaran.

Related Stories: