சென்னை கிண்டியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை கிண்டியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைஞரின் நூற்றாண்டையொட்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் மகிழம் மரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்டு வைத்தார். வேம்பு, ஆலமரம், புங்கை உள்ளிட்ட 5லட்சம் மரக்கன்றுகள் அடுத்த 4 மாதங்களில் நடப்படவுள்ளன.

The post சென்னை கிண்டியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: