கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோயில் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரி அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. கோயில் வருவாய், செலவுகளை மத்திய சி.ஏ.ஜி. தணிக்கை செய்வதால் மாநில அரசு உரிமை பறிக்கப்படாது என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

The post கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: