திருமங்கலம் அருகே 105 வயது சகோதரியுடன் பிறந்தநாள் கொண்டாடிய 98 வயது மூதாட்டி

திருமங்கலம்: திருமங்கலம் அருகே 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 98 வயது மூதாட்டிக்கு, அவரது குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராசு-வேலாயி தம்பதி. இவர்களுக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். 93 வயதில் ராசு இயற்கை எய்தினார். பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாயிக்கு, தற்போது 98 வயதாகிறது. இந்நிலையில், வேலாயிக்கு பிறந்த நாள் கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதன்படி, நேற்று கூடக்கோவிலில் உள்ள வேலாயி இல்லத்தில், பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்திருந்தனர். வேலாயி தனது 4 தலைமுறையை சேர்ந்த பேரன், பேத்திகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். இதில், சிறப்பு அம்சமாக வேலாயியின் சகோதரி 105 வயதான கருப்பாயி அம்மாள் பங்கேற்று வாழ்த்தினார். 98 வயது தங்கை பிறந்தநாள் விழாவில் 105 வயதான அவரது சகோதரி பங்கேற்றது கூடக்கோவில் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post திருமங்கலம் அருகே 105 வயது சகோதரியுடன் பிறந்தநாள் கொண்டாடிய 98 வயது மூதாட்டி appeared first on Dinakaran.

Related Stories: