ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலருக்கு யுனெஸ்கோ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: யுனெஸ்கோவின் விருதுக்கு தேர்வாகியுள்ள ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜகதீஷ்பகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ்பகன், யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான மைகெல் பெட்டிஸ் விருதுக்கு தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள். நமது அரசு அமைத்த மெரைன் எலைட் படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். ஜூன் 14ம் தேதி பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள ஜகதீஷுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலருக்கு யுனெஸ்கோ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: