திருச்சி காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை: பாலியல் புகாரின் பேரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமாரனை பாலியல் புகாரின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 27 வயது இளம் பெண் திருச்சி பாலக்கரை பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண் தனது உறவினர் மீது கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக ஆய்வாளர் சுகுமாரன் அப்பெண்ணை மீண்டும் விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுகுமார் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். அதை தொடர்ந்து சுகுமாரன் வாட்ஸ் ஆப் வாயிலாக தனக்கு ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பி பேசி வந்ததாகவும், இது தொடர்பாக ஆன்லைன் மூலமும், திருச்சி மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தன்னை சிலர் மிரட்டுவதாகவும், பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

The post திருச்சி காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை: பாலியல் புகாரின் பேரில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: