கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு: இஞ்சி, பட்டாணி ரூ.200, பீன்ஸ் ரூ.100க்கு விற்பனை

சென்னை: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைவு காரணமாக, கோயம்பேட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் தினமும் 650 வாகனங்களில் 7,000 டன் காய்கறிகள் வருகிறது. இந்தநிலையில்ஒரு கிலோ இஞ்சி ரூ.200க்கும், பீன்ஸ் ரூ.100க்கும், எலுமிச்சம் பழம் ரூ.110க்கும், பச்சை பட்டாணி ரூ.200க்கும், முருங்கைக்காய் ரூ.120க்கும் கேரட் , கத்திரிக்காய் ரூ.70க்கும், பீட்ரூட், வெண்டைக்காய் ரூ.40க்கும், காராமணி ரூ.50க்கும் சுரக்காய் ரூ.40க்கும், சேனைக்கிழங்கு ரூ.50க்கும் அவரைக்காய் ரூ.60க்கும், பீர்க்கங்காய் ரூ.40க்கும், வண்ண குடைமிளகாய் ரூ.100க்கும், பாகற்காய் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னை புறநகரில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.140க்கும், இஞ்சி, பச்சை பட்டாணி ரூ.250க்கும், முருங்கைக்காய் ரூ.150க்கும் எலுமிச்சை ரூ.150க்கும், கேரட் ரூ.100க்கும் விற்பனையாகி வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரவு குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இது ஒரு மாதம் நீடிக்கும்’’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு: இஞ்சி, பட்டாணி ரூ.200, பீன்ஸ் ரூ.100க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: