இந்த விபத்தின் சோக சுவடுகள் மறைவதற்குள் ஒடிசாவின் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. டுங்குரி சுரங்கத்திலிருந்து பர்கர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது சம்பர்தாரா பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.விபத்து நடந்ததைத் தொடர்ந்து உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்பு பணிகளை தொடர்ந்து, தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஒடிசாவில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டது : யாருக்கும் காயம் இல்லை!! appeared first on Dinakaran.