பாஜக எம்பியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, ஜூன் 5: சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பியை கைது செய்ய கோரி போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது அடக்கு முறையை ஏவியதை கண்டித்தும், உடனடியாக பாஜக எம்பியை கைது செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாவட்ட செயலாளர் சாந்தி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் கண்டன உரையாற்றினர்.

ஒன்றிய செயலாளர் உலகநாதன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மணியம்மா, மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் மெய்யப்பன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் உமாநாத், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் சண்முகப்பிரியா, சிஐடியூ மாவட்டத் தலைவர் வடிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பாஜக எம்பியை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: