மதுரை, ஜூன் 5: மதுரை அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் புதிய தனிப்பிரிவாக குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் உள்ள குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை மையம் தற்போது மேம்பட்ட நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய பிளாக் கட்டிடத்திற்கு தனிப்பிரிவாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ அலுவலர்கள் கூறுகையில், ‘‘மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் உள்ள குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை மையம், மேம்பட்ட நவீன வசதிகளுடன் தனிப்பிரிவாக துவங்கப்படுகிறது.
நோயாளிகள் வசதிக்காக தற்போது புதிதாக தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நவீன லேப் வசதிகள், சிறப்பு சிகிச்சைகள் என பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன் குழந்தையின்மை சிகிச்சை மையம் உள்ளது. குழந்தையின்மைக்கு எளிய மக்களுக்கும் முறையான அதிக செலவு இல்லாத சிகிச்சை இந்த பிரிவில் கிடைக்கும். இதற்காகவே மேம்பட்ட நவீன சிகிச்சை முறை வசதிளுடன் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
The post மதுரை ஜி.ஹெச்சில் நவீன வசதிகளுடன் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை பிரிவு துவக்கம் appeared first on Dinakaran.
