ஸ்ரீனிவாச வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழா

தண்டையார்பேட்டை, ஜூன் 3: காஞ்சிபுரத்தில் இருப்பது போன்றே தண்டையார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாச வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வருடாந்திர பிரமோற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். வரதர் தேர் வடிவிலான சன்னதியில் இருப்பது இங்கு மட்டும்தான். இந்த ஆண்டு விழா கடந்த 31ம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான நேற்று காலை கருட சேவை நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் வரதராஜ பெருமாள் ஒய்யாலி நடன சேவையுடன், கோயில் உட்பிரகாரங்களை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கருட சேவை நிகழ்வை காண்பதற்காக, தண்டையார்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர் நான்கு மாட வீதி புறப்பாடு நடந்தது.வரதர் கருடன் வாகனத்தின் மீது எழுந்தருளி, ஒய்யாலி சேவையாடிய நிகழ்வை ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

The post ஸ்ரீனிவாச வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி விசாக பிரமோற்சவ திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: