சென்னை: ஆணவக்கொலையைத் தடுத்திட ஒன்றிய, மாநில அரசுகள் சட்டமியற்ற முன்வர வேண்டும் என திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். கோகுலராஜ் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆணவக்கொலையைத் தடுத்திட ஒன்றிய, மாநில அரசுகள் சட்டமியற்ற முன்வர வேண்டும் என திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சாதிவெறிப் பித்தர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருப்பதுடன், முதல் குற்றவாளி உயிருள்ள வரையில் சிறையிலிருக்க வேண்டுமெனவும் உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்திருப்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது.
இந்நிலையில், ஆணவக்கொலையைத் தடுத்திட ஏதுவாக சட்டமியற்ற முன்வர வேண்டுமென தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துகிறோம். அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் துணிந்து வாதாடி நீதிகாத்த வழக்குரைஞர்கள் ப.ப.மோகன், லஜபதிராய் உள்ளிட்ட அனைவருக்கும் சிறுத்தைகளின் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
The post ஆணவக்கொலையைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற முன்வர வேண்டும்: திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல் appeared first on Dinakaran.