The post துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில் ரூ.5. லட்சம் வரைவோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இந்த விருதினை பெற தகுதியுள்ளவர். 2023ம் ஆண்டிற்கான துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன. துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30 ஜூன் 2023 ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள், பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
The post துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.