அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை: ஜூன் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சிவகங்கை, மே 31: அரசு பாலிடெக்னிக்கல் கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மதுரை-மேலூர் சாலை அம்பலக்காரன்பட்டியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (பாலிடெக்னிக்) மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. முதலாமாண்டில் 240 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய நான்கு துறைகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு, முதலாமாண்டில் சேர விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் //www.tnpoly.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 09.06.2023 ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை: ஜூன் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: