வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 

ராமநாதபுரம், மே 31: துறையூர் வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடி உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பு உணவு இடைவேளையின் போது வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதுகுளத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை சங்க வட்டாரக் கிளை தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இதுபோன்று கடலாடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாசில்தார் ரெங்கராஜன் தலைமை வகித்தார். தாசில்தார் பரமசிவம் முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார்கள் சாந்தி, தமிழ்மதி உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். இதுபோல் கீழக்கரை, திருவாடனை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடந்தது.

The post வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: