கொடைக்கானலில் கோலாகலமாக நடைபெற்ற படகு போட்டி; சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் கோலாகலமாக நடைபெற்ற படகு போட்டியில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் படகு போட்டி நடைபெற்றது. இதனை கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவு மற்றும் தம்பதியர் பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 30க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கெடுத்தனர்.

சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் படகுக்குழாம் சார்பாக போட்டிகள் நடைபெற்றன. படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் நடைபெறும் வாத்து பிடிக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறாதது ஏமாற்றம் தருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

The post கொடைக்கானலில் கோலாகலமாக நடைபெற்ற படகு போட்டி; சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: