சென்னை மாநிலக் கல்லூரியில் சேர 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியில் சேர 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நேற்று முதல் நாள் நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற 643 மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். ராணி மேரி கல்லூரியில் 77 சிறப்புப் பிரிவு இடங்களுக்கு 1,353 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

The post சென்னை மாநிலக் கல்லூரியில் சேர 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: