ரகுநாத காவிரி வாய்க்காலில் பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும்

நீடாமங்கலம், மே 29: நீடாமங்கலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியக்குழு கூட்டம் கட்சி நிர்வாகி அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.மாநில, மாவட்ட குழு முடிவுகளை விளக்கி செயற்குழு உறுப்பினர் கந்தசாமி , ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி ஆகியோர் விளக்கி பேசினர்.கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பூசாந்திரம், சுமதி, நகர செயலாளர் தமிழ்மணி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காளியப்பன் செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியம் ஊராட்சி அனுமந்தபுரம் ஊராட்சி கிளியனூர் ரகுநாத காவிரி வாய்க்காலில் விவசாயிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாலம் கட்டுவதற்கு நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டர் விடப்பட்டு இது நாள் வரை கட்டவில்லை. குறுவைக்கு ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் பாலம் கட்டுமானப் பணியை உடன் துவங்க வேண்டும். இல்லையெனில் பாலம் கட்ட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post ரகுநாத காவிரி வாய்க்காலில் பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: