தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு மக்கள் பாதிக்காத வகையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் ஒன்றிய அரசின் அணுகுமுறையை பெருந்தலைவர் மக்கள் கட்சி வரவேற்கிறது.
சென்னை விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட பன்னாட்டு விமான முனையத்தில் காமராஜரின் திருவுருவச் சிலையை திறந்து வைக்க வேண்டும். மேலும், காந்தி மண்டபம் அருகே சுதந்திர போராட்ட தியாகிகளான வீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி, மருதுபாண்டியர்களுக்கு முழு உருவச் சிலைகளும், மார்பளவிலான சங்கரலிங்கனாரின் சிலையை மாற்றி முழு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post போரூரில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயற்குழு கூட்டம்: 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.